SHARE

முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறுகோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக இன்று (புதன்கிழமை) ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் முல்லைத்தீவு உண்ணாப்புலவு பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்தோடு வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையை முற்றுகையிட்டும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த போராட்டம் காரணமாக முல்லைத்தீவு நகரின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியதுடன் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதோடு கடற்தொழில் நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

மேலும் இப்போரட்டம் நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையிடலின் பின்னர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email