SHARE

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலவும் நிலையில் இன்றிலிருந்து யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் இரு வாரங்களுக்கு விமான சேவைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இங்கிலாந்து, நோர்வே மற்றும் பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்கான அனைத்து விமானங்களும் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email