SHARE

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதுடன் 227 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மருத்துவ கண்காணிப்பில் மேலும் 05 பேர் உள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள 45 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 3,506 பேர் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 52 வயதான சுற்றுலா வழிகாட்டி ஒருவர் முற்றாகக் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.

Print Friendly, PDF & Email