SHARE

இலங்கைக்கான அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர் வரும் 29 ஆம் திகதி கொழும்புக்கு பயணம் செய்யவுள்ளார்.
கொழும்பில் மகிந்த ராஜபக்ச மற்றும் இதர அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சிவ்சங்கர் மேனன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது.
சிவ்சங்கர் மேனனின் கொழும்பு விஜயமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதொன்றல்ல என்றும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் முக்கிய பேச்சுகளை நடத்தவே அவர் அவசரமாக இலங்கை செல்கிறார் எனவும் அறியமுடிகின்றது.
வன்னி இன அழிப்பு நடந்துகொண்டிருந்த காலத்தில் பல தடவைகள் இலங்கை சென்று திட்டமிட்ட இன அழிப்பை நிகழ்த்துவது தொடர்பாக இந்திய அரசு சார்பி ஆலோசனை வழங்கியவர் சிவ் சங்கர் மேனன். வழமைபோல இலங்கையுடனான வியாபாரப் பேரமாகவே இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Print Friendly, PDF & Email