SHARE

யாழ். தென்மராட்சி மிருசுவில் மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் சகோதரர்கள் எனவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் மைத்துனர்கள் மூவர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியதில் அதே இடத்தைச் சேர்ந்த ராஜகோன் சிவகுமார் என்ற 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் சகோதரர்கள் மூவரில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் கொடிகாமம் பொலிஸாரின் பாதுகாப்பில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு உயிரிழந்தவரின் துணைவியும் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email