SHARE

பல வருடங்களாக இலங்கையில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வரும் வேளையில், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வேலையின்மை காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறு அவதியுறும் 41 அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு இடர் கால நிவாரண உதவுகளை வழங்க இலண்டனில் இயங்கும் தமிழர் தகவல் நடுவம் (TIC) என்ற அமைப்பு முன்வந்துள்ளது.

இந்த உதவித்திட்டத்தின் ஒரு கட்டமாக, யாழ்ப்பாணத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 13 குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் கடந்த 15 ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர் பொ.சோபிகாவின் ஏற்பாட்டில் இலண்டனில் உள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கீத் குலசேகரத்தின் நிதி உதவியில், இந்த உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கான உலர் உணவு பொதிகளை யாழ் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந், ஊடகவியலாளர் கிசோர், CHRD அமைப்பின் யாழ் மாவட்ட தலைவர் நிருஜன் ஆகியோர் வழங்கி வைத்தனர் .

Print Friendly, PDF & Email