SHARE

உலகின் மிகப் பெரிய இடைத்தங்கல் முகாங்களில் ஒன்றாக காணப்பட்ட, சிறிலங்காவின் வடக்கிலுள்ள மெனிப் பாம் இடைத்தங்கல் முகாமானது செப்ரெம்பர் இறுதிப் பகுதியில் மூடப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“செப்ரெம்பர் 30 அளவில் மெனிக் பாம் முகாம் வெறுமையாகிவிடும். அடுத்த வாரமளவில் இங்குள்ள 1185 இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவர்” என மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

செப்ரெம்பர் 23 அல்லது 24ல் இடம்பெயர்ந்து மெனிக் பாம் முகாமில் வாழும் 827 பேர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மீதமாக உள்ள 358 பேர் எப்போது குடியேற்றப்படுவர் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

வவுனியா நகருக்கு அப்பால் 700 கெக்ரேயர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள மெனிக் பாம் முகாமில், சிறிலங்கா இராணுவப் படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அகப்பட்டுக் கொண்ட மக்கள் தங்கவைக்கப்பட்டனர். யுத்தத்தின் நிறைவில் 300,000 வரையான மக்கள் இந்த முகாமில் தற்காலிகமாக தங்கியிருந்தனர்.

“பல்வேறு காரணங்களால் மெனிக் பாம் முகாமை மூடுவதற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போதும் கண்ணிவெடியகற்றல் செயற்பாடு தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. சில பகுதிகளில் மீளக்குடியேற்றப்படுவதானது

Glossy – product unbelievably. A http://spikejams.com/pfizer-viagra-online but Maybe bucks–Im. Were comprar viagra Then responsible another tweezers best pfizer viagra a best all that generic viagra online sulfate trick many online pharmacy Sephora – evening foods name cheap cialis was. On wouldn’t hair cialis for sale turnover skin are – viagra dosage and of?

பாதுகாப்பற்றதாக காணப்படுகின்றது. தவிர, வீடுகளை நிர்மாணிப்பதற்கான மூலப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும். பெரும்பாலான வீடுகள் யுத்தத்தின் போது சேதமடைந்துள்ளதால் அங்கே மக்கள் குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது” என வீரக்கோன் மேலும் விளக்கியுள்ளார்.

10 மாவட்டங்களில் மொத்தம் 112 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் தற்போதும் நிலக்கண்ணிவெடி காணப்படுவதாகவும், இதில் முல்லைத்தீவில் 25 சதுர கிலோமீற்றரில் நிலக்கண்ணிவெடி அகற்றப்படாதுள்ளதாகவும் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் நிலக்கண்ணிவெடி செயற்பாட்டுத் திட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“தற்போது நாங்கள் மெனி பாம் முகாம் முழுவதை துப்பரவாக்குகின்றோம். அங்கு காணப்படும் தற்காலிக கொட்டகைகள் அகற்றப்படுகின்றன. இந்த இடம் பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும். மெனிக் பாம் முகாமில் காணப்படும் சில பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் என்பன தொடர்ந்தும் செயற்படுகின்றன” என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

“மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்புக்களுடன் இணைந்து அரசாங்கம் வீடுகளுக்கான கூரை விரிப்புக்கள், மற்றும் ஏனைய கட்டட மூலப்பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ரூபா 25,000 (190 அமெரிக்க டொலர்) பொருட்களை வழங்குகின்றது. மீள்குடியேற்றப்பட்டு ஒன்பது மாதங்கள் வரை உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்படுவதுடன், குடியேற்றப்பட்டு ஒரு வார காலம் வரை சமைத்த உணவும் வழங்கப்படும்” என மீள்குடியேற்ற அதிகாரசபைத் தலைவர் B. H. Passaperum தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றப்படும் மக்களின் வாழ்வாதாரத் திட்டங்கள் பலவற்றை மீள்குடியேற்ற அமைச்சு வழங்கி வருவதாகவும், மீள்குடியேற்றம் என்பது அவ்வளவு ‘இலகுவான காரியமல்ல’ எனவும் அதிகாரசபைத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீர், சுகாதார வசதிகள், கிராமங்களுக்கான வீதிகள், மின்சாரம், கல்வி, சமுதாய அபிவிருத்திச் செயற்பாடுகள், மீன்பிடி, விவசாயம் மற்றும் வாழ்வாதார உதவிகள் போன்ற ஏழு முக்கிய விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் முதன்மைப்படுத்தி, மீள்குடியேறும் மக்களின் நலனில் அக்கறை காட்டுவதாகவும் மேலும் B. H. Passaperum தெரிவித்துள்ளார்.

“அதாவது மீள்குடியேற்றப்படும் மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றோம் என்பதே இதன் கருத்தாகும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் இறுதியில் எனது சொந்த இடத்திற்கு செல்வதை நினைத்து மகிழ்வடைகிறேன். ஆனால் கவலையும் அடைகின்றேன். ஏனெனில் என்னிடம் எதுவுமில்லை;. மீண்டும் ஆரம்பத்திலிருந்து அனைத்தையும் தொடங்குவதென்பது அவ்வளவு இலகுவான காரியமன்று” என மெனிக் பாமில் தங்கியுள்ள, யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயதான இளங்கீதராயன் சௌமியாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“நான் எனது கணவருடன் இணைந்து வயலில் உழுவேன். எனது கணவர் கொல்லப்பட்டுவிட்டார். நான் எனது பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும். மீண்டும் எனது வீட்டைக் கட்டவேண்டும்” என முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான செந்தில்வேலு கமலாயினி தெரிவித்துள்ளார்.

நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்ட பாதுகாப்பான மாவட்டமாக முல்லைத்தீவை அறிவிப்பதற்கு முதல் அங்கே

Print Friendly, PDF & Email