நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட மக்கள் இராணுவமே தமிழர் நிலங்களை விட்டு உடனே வெளியேறு, தமிழர் நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களா? எமது நிலத்தில் சுதந்திரமாக வாழ விடு, சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்,போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சிறிதரன், வினோநோகராதலிங்கள்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோகனேசன் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாஸ்கரா மற்றும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.