SHARE

வெலிக்கடைச் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற கலவரத்தில், கொல்லப்பட்ட 11 பேரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதை அடுத்து, இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மோதலில் இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட 16 பேரின் சடலங்கள் நேற்று மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கலவரத்தின் போது சிறைச்சாலை ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த 82 துப்பாக்கிகளை கைதிகள் கைப்பற்றியுள்ளனர்.

அவற்றில் பெரும்பாலானவை மீட்கப்பட்டுள்ளன. இன்னமும் 5 துப்பாக்கிகள் காணாமற் போயுள்ளன.”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறைச்சாலைக்குள் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே சிறைக்காவலர். ஏனையோர் கைதிகளாவர்.

காயமடைந்த 43 பேரில், 13 சிறப்பு அதிரடிப்படையினரும், 4 படையினரும் உள்ளடங்குகின்றனர்.

Print Friendly, PDF & Email