SHARE

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலை தொடக்கம் விசாரிக்கப்பட்டு வந்த நான்கு இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகளும், ஒரு ஸ்ராவ் சார்ஜன்ட் தர அதிகாரி மற்றும் ஒரு கோப்ரல் தர அதிகாரி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இன்று காலை தொடக்கம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் வாக்குமூலம் அளிப்பதற்கு நான்கு படை அதிகாரிகளுக்கும் சிறிலங்கா இராணுவத் தலைமையகம், அனுமதி அளித்துள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.122981840133

Print Friendly, PDF & Email