வன்னியில் காணாமல் போன எனது மகளை வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டிருந்தேன். அப்போது அவர் வெள்ளை நிற உடையில் வெள்ளை நிற மாலை அணிந்து வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார் என தாய் ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்கு-ழுவின் விசாரணைகள் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் நேற்றைய தினம் நடைபெற்றன. இதன்போது கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் அங்கு சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் சாட்சியமளிக்கை யில்,
எனது மகள் அனுசியா கிளிநொச்சியில் அரச துறையில் பணிபுரிந்து கொண்டு எனது சகோதரியோடு வாழ்ந்து வந்தார். இந் நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அவர் காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு இருக்கையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு பதிவு ஒன்றை மேற்கொள்வதற்காக நான் சென்றிருந்தேன். இதன்போது எனது மகளை அங்கு கண்டேன். எனினும் எனது மகள் என்னைக் காணவில்லை. அவர் சற்று தூரத்திலேயே நின்றிருந்தார். அப்போது அவர் வெள்ளை நிற உடையணிந்திருந்ததுடன் வெள்ளை நிறத்தில் மாலையும் அணிந்திருந்தார். இந்நிலையில் எனது மகள் உட்பட சிலரை அங்கு வந்த அதிகாரிகள் வாகனமொன்றில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அங்கு நின்ற அதிகாரிகளிடம் இவர்கள் எங்கு கூட்டிச் செல்லப்படு கிறார்கள் எனக் கேட்டபோது நீதிமன்றத்துக்கு கூட்டிச் செல்வதாக அந்த அதிகாரி பதில் வழங்கியிருந்தார். இதன்போது அந்த அதிகாரியிடம் எனது மகளின் பெயர் விபரத்தை கூறி வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுபவரில் எனது மகளும் ஒருவர் எனக் கூறினேன். அதற்கு அந்த அதிகாரி அத்தகைய பெயர் இல்லை எனத் தெரிவித்தார்.
அவருடைய கூற்று அவ்வாறாக அமைந்திருந்தாலும் நான் கண்டது எனது
மகளைத் தான். அது எனக்கு நன்றாக தெரியும்.
அத்தோடு எனது மகள் மற்றும் அவரோடு சேர்த்து மேலும் பலர் நிற்பதாக இருக்கும் படத்தை முகப்புத்தகம் ஒன்றில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பார்த்தேன். எனவே என்னுடைய மகள் உயிரோடுதான் உள்ளார். தயவுசெய்து அவரை என்னிடம் மீட்டுத் தாருங்கள் என ஆணைக்குழு அதிகாரியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேவேளை தன்னுடைய பிள்ளை உட்பட எட்டுப் பேரை இராணுவமே சித்திரவதை செய்து படுகொலை செய்தது என http://www.cialisgeneriquefr24.com/medicament-cialis-generique/ ஆணைக்குழு முன்னிலையில் தந்தை ஒருவர் சாட்சியமளித்ததுடன் மகனின் படுகொலைக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
எனது மகன் சந்திரசேகரம் யாழ்ப்பாணம் காட்டுக்கந்தோர் வீதியில் இருந்த கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். 1996 ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 19 திகதி அன்று இரவு அரியாலையில் இருந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் எனது மகனையும் அவரோடு சேர்த்து வேறு எட்டுப் பேரையும் பிடித்து சென்றனர்.
இதனையடுத்து நான் எனது மகனை தேடி குறித்த இராணுவ முகாமிற்குச் சென்ற போது அங்கிருந்த இராணுவத்தினர் என்னை தாக்க வந்ததுடன், உங்களது மகனை தேட வேண்டாம் அவர் இங்கு இல்லை என கூறினர்.
காலப்போக்கில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் எனது மகன் உட்பட எண்மர் இராணுவத்தினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர் எனத் தெரியவந்துள்ளது.
எனவே எனது மகன் உயிரோடு இல்லை என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். அத்துடன் எனது மனைவியும் இன்னொரு மகனும் விமானத் தாக்குதலில் உயிரிழந்து விட்டனர். எனவே வறுமை நிலையில் இருக் கும் எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
http://www.virakesari.lk/article/3726