SHARE

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் நிருபர் அல்வின் சுகிர்தன்

‘ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி – எட்டுத்
திக்கிலும் மானத்தை சேர்த்த கொடி’

எங்கள் ஈழத்தின் கொடிய வேதனை நிறைந்த அந்த கோரப்படுகொலை அரங்கேறிய நாளிற்கு இன்னும் சில மணி நிசிகளே உள்ள போது அந்த ஆறா வேதனையை தீர்க்கவல்லது எங்கள் தேசியக் கொடி என்பதை தமிழ் தேசியக் கீதமே எங்களிற்கு சொல்லி நிற்கின்றது என்பதை வாசகனுக்கு முதலில் அழுத்திக்கொண்டு என் மன எழுகையை விரிக்கின்றேன்.

ஓர் இனத்தின் தலைவர் படை ஆட்சி என்பவற்றை விடவும் உயர்ந்ததாக அவ்வினத்தின தேசிய கொடி மதிக்கப்படுகின்றது. ஏனவே தான் எந்தவொரு நாட்டிலும் எச்;சிறப்பு நிகழ்வுகளிலும் அவ்வினத்தின் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தலைவர் படை அரசு உட்பட குடிமக்கள் அனைவரும் அக்கொடியின் கீழ் திரண்டு வணக்கம் செய்வர்.

‘இது யாவரும் அறிந்த ஒன்றே!’ என்ற வாசகனின் வியப்பிற்கு என் பதில்இ பிரித்தானியாவில் நினைவு கூறப்படவுள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வில் ஓர் அமைப்பு எம் இனத்தின் தேசிய கொடியின் கீழ் நிற்க மறுப்பதேயாகும்.

கொடியை இழந்தால் எம் இறைமையை நாம் இழப்போம் என்பதை அவர்கள் உணர்ந்து கௌ;ள வேண்டும்.

எம் இனத்துக்கான தேசிய கொடி உருவான வரலாறு மிகவும் போரட்டகரமானது. சேர சோழ மன்னன் வீழ்ந்த போது அவனது கொடி வீழ்ந்தது. பின்னர் கி.பி.1619 இல் சங்கிலிக்குமாரன் போர்துக்கேயரால் தோற்கடிக்கப்பட்ட போது நந்திக்கொடி வீழ்ந்தது. தொடர்;ந்து வன்னியை ஆண்ட பண்டார வன்னியனின் வர் கொடியும் சரிந்தது.

இவ்வாறு வீழ்த்தப்பட்ட தமிழ் இனத்தின் நிமிர்வுக்கு அதன் பண்பாட்டு மரபினை தழுவி எம் தேசிய தலைவர் பிரபாகரனால் உருவாக்கபட்ட புலிக்கொடியே இன்றும் தமிழனை தூக்கி நிற்கின்றது.

இதன் உருவாக்கம்இ போராட்டமும் வலிகளும் நிறைந்தவை என்பதை இன்று பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதனாலேயே அதன் புனிதத்தை உணர மறுத்து புறக்கணித்து பச்சோந்திகளாக நிற்கின்றனர் மறுப்பு வாதிகள்.

1947 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேசிய கொடி எதுவாக இருக்க வேண்டும் என்பதில் தமிழருக்கும் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருக்குமிடையே பிளவு உருவாகிற்று. இந்நிலையில் கண்டியை ஆண்ட கடைசி மன்னன் விஐயனின் சிங்கக்கொடியை இலங்கையின் தேசிய கொடியாக Nஐ.ஆர். nஐயவர்த்தன அறிவித்தார். ஆனால் தமிழனுக்கு என்று தனிக்கொடி உள்ளது. அதுவே நந்திக்கொடிஇ எனவே மூவினத்துக்கான பொதுவான கொடியே வேண்டுமென தந்தை செல்வா போர்க்கொடி தூக்கினார். ஏனினும் 1948 பெப்ரவர் மாதம் கண்டி தலதா மாளிகையில் தேசிய கொடியாக சிங்கக்கொடி ஏற்றப்பட்டது. ஏனினும் தமிழரின் போராட்டம் நிற்கவில்லை. இதனால் தேசிய கொடி பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு கொடியில் எந்த மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது என்றதுடன் அதில் சிறுபான்மை இனத்தவருக்காக மஞ்சள் கோட்டிற்கு வெளியே இரு பட்டைகள் மாத்திரம் இடப்படும் என 1950 இல் தீர்மானித்தது.

இதனால் 1957 இல் இலங்கையின் சுதந்திர இதினத்தை தமிழர்கள் புறக்கணித்து துக்கநாளாக அனுஷ்டித்தனர். இதில் சிங்கக்கொடியை எரித்த தமிழர்கள் சுட்டுக்கொள்ளப்பட்ட வரலாறும் உண்டு.

இந்நிலையிலேயேஇ எம் தமிழரின பாரம்பரிய பழைய வரலாறு தேசியதலைவர் பிரபாகரனால் புதுப்பிக்கப்பட்டது எனலாம். அடக்கு முறைகளுக்கு எதிராக வீறு கொண்டு எழும் தமிழ் இனம் என்பதை பிரதிபலிக்கும் நோக்கில் வட்டத்துக்கு வெளியே பாயும் புலியை கொண்ட கொடியை உருவாக்கினார்.

1977 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலி கொடி தோற்றம் பெற்றது. ஆனால் ஆரம்பத்தில் அக்கொடி விடுதலை அமைப்பின் கொடியாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி அதில் இருந்த தமிழீழ விடுதலை புலிகள் என்ற எழுத்தை நீக்கி எம் தமிழ் இனத்தின் தேசிய கொடியாக தலைவர் பிரபாகரன் அறிவித்தார்.

சிங்கக் கொடியில் தமிழருக்கு சிறிய இடத்தையை கொடுத்த பேரி;னவாதத்துக்கு இது பொரும் இடியாக மாறியது.

இவ்வாறு பல போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டு எம் இனத்தை அடையாளப்படுத்தி நிற்கும் கொடியை மறுப்பது தன்னை கருவில் சுமந்து உயிர் தந்தவளை மறுப்பதற்கு சமமாகும்.

தமிழர் தாயகத்தில் இறுதியாக நடத்தப்பட்டது இலங்கை படையினரது தனித்த யுத்தம் அல்ல என்பது உலகு அறிந்த விடயம். உலக அரங்கில் பேரரசுகளுடனும் வல்லரசுகளுடனுமே எமது போராட்டம் முட்டி மோதியது. தெரிந்தும் புலம்பெயர் தமிழர்கள் நாம் அவர்கள் உயிர்களைத் தியாகம் செய்து தரும் வெற்றிச் செய்திகளை கொண்டாடுவதிலும் விமர்சனம் செய்வதிலும் மாத்திரம் நின்றிருந்தோம்.

சர்வதேசம் எங்கும் பரந்து வாழும் நாங்கள் உரி;ய நேரத்தில் ஒன்றாக குரல் எழுப்ப தவறியதன் விளைவே இந்த முள்ளிவாய்;க்கால். அதே தவறை மீண்டும் செய்து இன்னுமொரு முள்ளிவாய்க்காலை உருவாக்கப்போகிறோமா?
முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும் அதற்கான நீதியை இதுவரை நாம் பெற முடியாமல் நிற்கின்றோம் என்றால் அது சர்வதேசத்தின் பாராமை அல்ல எம் இனத்திற்குள் உள்ள சுயநலமும் போட்டியுமே காரணம்.

மாவீரர் நாளில் கொடியை ஏற்றி எம் இனத்தின் வீரர்களின் தியாகத்தை மதிக்கிறோம் என மார்தட்டும் பிரித்தானியா தமிழர் பேரவை (டீவுகு) அமைப்பு இறுதி யுத்தத்தில் எம் ஒட்டுமொத்த இனத்தின் தியாகத்தை தேசிய கொடி  ஏற்றி அனுஷ்டிக்க மறுப்பதன் பின்னணி என்ன?

போராட்டமும் மக்களும் வேறுவேறு அல்ல என்பதில் முதல் தெளிவுகொள்ளல் வேண்டும். தமிழருக்கு எதிரான இறுதி யுத்தத்தில் சிங்களம் தனித்து அல்லாது சர்வதேசமும் பின்னால் நிற்கும் போது அங்கு மக்களும் தான் போராடினார்கள். தனியே ஆயதம் ஏந்திக் களமாடுவது மட்டும் போராட்டமல்ல. கையில் இருந்ததை சமைத்து கொடுத்த தாய்மார் போராடினார்கள் காயப்பட்ட போராளிகளையும் மக்களையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற தந்தையர் போராடினர் இவ்வாறு இறுதியில் அங்கு நின்ற அனைவரும் ஒரு போராளியாகவே செயற்பட்டனர். இதன் சாட்சிகள் பல புலம் பெயர் நாடுகளிலும் தற்போது உள்ளன.

இந்நிலையில் இறுதிவரை நின்று போராடிய மக்களை நினைவுகூற அவர்களின் தியாகங்களிற்கு மதிப்பளிக்க நினைவு நாளில தேசியக்கொடி ஏற்றப்படல் வேண்டும்.

ஏம் இனத்தின் போராட்ட வடிவம் மாத்திரமே மாற்றம் பெற்றுள்ளது. தமிழர் தாயகம் என்ற இலட்சியம் மாறவில்லை. புலம்பெயர் தமிழரிடமே போராட்டத்தின் புதிய வடிவத்தின் பொறுப்பு உள்ளது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வரும் வரை தாயக உறவுகள் புலம்பெயர் உறவுகளிடம் எதைக்கேட்டும் நிற்கவில்லை. 2004 ஆழிப்பேரலையின் போதும் உருண்டெழுந்து அவர்கள் தம்மை கட்டியெழுப்பத் தயாரானார்கள். ஆனால் இன்று அவர்களின் இழப்புக்கள் அதிகம். அதை பெற்றுக்கொடுக்க நிவர்த்திசெய்ய சர்வதேசத்துடன் பின்னி வாழும் புலம்பெயர்வாழ் எங்களுக்கே பொறுபுள்ளது. அந்தப் பொறுப்பிலிருந்து தவற நினைப்பது எம் இனத்துக்கு செய்யும் பெரும் துரொகமே.

இந்நிலையில் இங்;கு தன்னிச்சையாக பிரிந்து பிளவு பட்டு எமது பலத்தை குறைத்து என்ன இலக்கை தன்னிச்சைவாத அமைப்புக்கள் அடையப்போகின்றன.
ஓர் இனத்தின் விடுதலை என்ற உன்னத இலட்சியத்துக்காக பாடுபடும் எந்த அமைப்பும் அதன் அடையாளங்களை தொலைத்து விட்டோ புறக்கணித்த விட்டோ அவ்வினத்துக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க முடியாது என்பது வரலாறு.

இன்று சிங்களப்பேரினவாதத்தின் ஆட்சியே இலங்கை முழுவதும் பரந்து கிடக்கின்ற போதிலும் தாயகத்தில் தற்;போதும் எம் இனம்சார்ந்த நிகழ்வுகளில் இம் தேசிய கொடியின் பிரதான வர்ணங்களான சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றமை யாவரும் அறிந்ததே.

உயிர் அச்சுறத்தல்களுக்கு நடுவிலும் எம் இனத்தின் அடையாளங்களை இழக்க மறுக்கும் எம் தாயக உறவுகளின் உணர்வுகளிற்கும் மனித்துவம் காக்கும் நாடுகளின் சுதந்திர நிழலில் வாழும் புலம்பெயர் எம்மவரின் உணர்வகளுக்கும் இடைவெளி அதிகம் என்றே கூறலாம்.

சாதி மத பேதமின்றி பேரினவாதத்தின் அடக்குமறைக்கு எதிராக கிளர்ந்தெழும் தமிழனாக ஒன்று திரட்டிய அப்புனித கொடியை புறக்கணிக்க முயலும் அமைப்புக்கள் மீண்டும் எம் இனத்துக்கு புதிய புதைகுழியை தோண்டி அதன் மேல் உட்கார்ந்து சுயலாபம் பெறவே முயல்கிறார்கள்.

புpரித்தானியாவில் பல்லின மக்;கள் வாழுகின்றனர். அவர்கள் தங்கள் இனம் சார்ந்த  நிகழ்வுகளில் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தவோ தம் இனத்தின் தேசியகொடியை ஏந்தவோ தடை இல்லை. எனவே வலிகள் நிறைந்த அந்த கொடுர இனப்படுகொலையின் ஆறாப் புண்களை உலகிற்கு மீண்டும் மீண்டும் அவிழ்த்துக்காட்டி மருந்து கேட்க எதிர் வரும் 18 ஆம் திகதி தேசிய கொடியின் கீழ் அணிதிரள வேண்டும்.

உலகில் எங்கு வாழினும் நாம் தமிழர் என்பதை அடையாளப்படுத்துவது எமது கலை கலாச்சாரம் மற்றும் சின்னங்களே. அவ்வாறு எம் சின்னத்தை தொலைக்க நிற்பது நிர்வாண கோலம்.

-சுகி

Print Friendly, PDF & Email