SHARE

உள்ளுராட்சி மன்ற தேர்தல் உத்தியோக பூர்வ முடிவுகள் வெளிவந்தவண்ணமேயுள்ளன. 2018 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெரும் எதிர்ப்பார்புகளுக்கிடையில் முடிவடைந்த நிலையில் வாக்கெண்ணும் பணிகள் நேற்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

யாழ். மாவட்டத்தில் உள்ள 12 உள்ளுராட்சி மன்றங்களிலும் ஆட்சி அமைத்தாலும் சபைகளை தலைமைத்துவப்படுத்துவதற்கான பெரும்பான்மையானது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒவ்வொரு கட்சியும் 3 இல் 2 இல் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள தவறியுள்ள நிலையில் அந்தந்த மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு பிறிதொரு கட்சியின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே காணப்படுகின்றது.
இதனிடையே முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் தாமதத்திற்கு தொழில்நுட்ப சிக்கல்களே காரணம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email