SHARE

காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையினை இனியும் காலம்தாழ்த்தாது வெளிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் இன்று மாபெரும் அமைதிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறை தொடர் எதிர்ப்பு போராட்டம் தீர்வின்றி இன்றுடன் ஒருவருடத்தை எட்டியுள்ளது.

இந்நிலையிலேயே, இதனை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் பாரிய அமைதிப்போராட்டமொன்றினை காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ளனர்.

காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இப்போராட்டத்துக்கு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்றைய இப்போராட்டத்துக்கு கடைகளை மூடி ஒத்துழைப்பு அளிக்குமாறு ஊடகங்களினுடாக காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னதாகவே கோரிக்கை விடுத்திருந்த போதிலும் தாம் கடைகளை மூடாது இன்றய போராட்த்துடக்கு ஆதரவு தருவதாக கிளிநொச்சி வர்த்தகர்களால் தெரிவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email