SHARE

திடீரென இலட்சாதிபதிகள், கோடீஸ்வரர்களாகிய ஆனால் அவ்வருமானத்துக்கான சரியாக வழியைக் குறிப்பிடத் தவறிய 152 பேருக்கு எதிரான இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்ய நடவ டிக்கை எடுத்துள்ளது.

அரசியல்வாதிகள், நீதிபதிகள், பாடசாலை அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், அரச வைத்தியர்கள், கிராம சேவையாளர்கள், அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இவ்வாறு வருமானத்துக்கு மேலதிக மாக பணம் சம்பாதித்தமை குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் இலஞ்சம் பெற்றோ அல்லது ஊழல் மூலமாகவோ அவற்றைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஆணைக்குழு அவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு களை விசாரணை செய்து அந்த நபர்களின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து குறிப்பிட்ட சொத்துகள் தொடர்பான தகவல்களைக் கண்டுபி டித்து இறுதியில் வருமானம் பெற்ற விதம் குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட வர்களின் சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளது.

ஆனால் இலஞ்ச ஆணைக்குழுவி னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத் திலான விடயங்களை அவர்கள் முன்வைக்கவில்லை. ஆகவே அவர் களுக்கு எதிராக இலஞ்சம் பெற் றுக்கொண்டதாக முடிவு செய்து வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email