SHARE

கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கட்டாயம் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

உலகத்திலேயே எதிர்க் கட்சி ஒன்று அரசாங்கத்தை பாதுகாப்பது இலங்கையில் தான் நடக்கின்றது. எதிர்க் கட்சி என்ற பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.

கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் 4ஆம் அறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே டலஸ் அழகபெரும இதனைத் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email