SHARE

எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரின் உருவப்பொம்மைகளுக்கு வீதியில் வைத்து இறுதிக்கிரியை ஒன்று செய்யப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்க வவுனியாவில் தொடர் போராட்டத்தி ஈடுபட்டு வரும் உறவினர்களே இன்னு தமக்கு பதிலை பெற்று தராத இவ் அரசியல் தலைவர்களுக்கு இவ்வாறு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கடத்தப்படும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிக்கக்கோரி வவுனியா தபால் நிலையத்துக்கு அருகில் சூழற்சிமுறையிலான உறவுகளின் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் நேற்றுடன் ஒருவருடத்தை அடைந்துள்ளது.

அந்தவகையில் 366 ஆவது நாளான நேற்று விசேட கவனயீர்பு போராட்டம் ஒன்றை நடத்திய உறவுகள் வவுனியா கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டுடன் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதன்போது ஆலய முன்றலில் ஒன்று கூடிய உறவுகள் அங்கு வைக்கப்பட்டிருந்த தமது உறவுகளின் புகைப்படங்களைப்பார்த்து உரக்க கதறி அழுதனர்.

பின்னர் ஆலய முன்வீதி வழியாக போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த உறவுகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போதே சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் உருவப்பொம்மைகளை தாங்கியவாறு முச்சந்தி நோக்கி சென்ற அவர்கள் அங்கு அதற்கு இறுதிக்கிரியைகளை செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Print Friendly, PDF & Email