ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது பொது அமர்வு ஜெனிவாவில் அமைந்துள்ள தலைமையகத்தில் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த அமர்வில் இலங்கை உள்ளிட்ட 47 நாடுகள் உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர செயிட் அல் ஹுசைனால் வருடாந்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
இந்நாட்டு மனித உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான முற்னேற்ற அறிவிப்பொன்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் மார்ச் மாதம் 21ம் திகதி ஜெனிவாவில் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசு இதுவரை மேற்கொண்டுள்ள செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்த மனித உரிமைகள் ஆணையாளரின் கண்காணிப்பு தொடர்பிலான விடயங்கள் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ள நிலையில் , அவை அறிக்கைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் முன்னேற்ற
அறிக்கை தொடர்பில் இலங்கை சார்பாக விடயங்களை தெளிவுபடுத்துவதற்கு குழுவொன்று ஜெனிவா நோக்கி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.