SHARE
ஜ.நா பாதுகாப்பு சபை தலையிட்டு இலங்கையை சர்வதேச குற்றவியல் பொறி முறையை அமுல்படுத்தகோரி தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில பொது அமைப்புக்கள் இணைந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கையெழுத்து போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இன்று மாலை 4 மணிக்கு மேற்படி கையெழுத்து போராட்டம் யாழ்.மத்திய பேருந்து நி லையத்தில் நடைபெற்றது. இதன்போது “இ லங்கை போர்குற்ற விவகாரம் தொடர் பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு நியாயதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஜ.நா. பாதுகாப்பு சபை நிறைவேற்றவேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
இந்த கையெழுத்து போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டுள்ளனர்.
Print Friendly, PDF & Email