SHARE

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மர்ம நோயினால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவர்கள் எந்த நோயினால் உயிரிழந்தார்கள் என வைத்தியர்களால் கூற முடியவில்லை.

எனினும் யாழில் உயிரிழந்த நான்கு குடும்பத்தைச் சேந்த 9 பேரின் ஆவிகளே இவர்களை கொலை செய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மேற்படி நபர்கள் ஒரு வகை வைரஸ் நோயினால் தான் உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் இதுதொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

எனினும் பிரதேச மக்கள் ஆவிகளின் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மர்ம நோயினால் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடம் இறுதி நான்கு மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பேரும் யாழ்பாணத்தில் 12 பேரும் மர்ம நோயால் உயிரிழந்துள்ளனர்.

இதுவைரை கண்டறியாத காய்ச்சலினால் இவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிரிழந்த அனைவரும் ஆவிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Print Friendly, PDF & Email