SHARE

பிரித்தானியாவை விட்டு தப்பிச்சென்றுள்ள இலங்கை தூதரகத்தின் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ மீள அழைக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி விளையடுத்துறை அமைச்சர் சொக்க லிங்கம் யோகலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இறுதி யுத்தின் போது ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்றழித்தவர்களின் மனநிலை இன்னும் மாறவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

பிரித்தனியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை அச்ச்சுறுத்தல் விடுத்திருந்த இலங்கை தூதரக பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்ய வேண்டும் என பிரித்தானிய பொலிஸிலும் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், குறித்த அதிகாரி தற்போது பிரித்தானியாவை விட்டு தப்பி சென்றுள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்த அதிகாரியின் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகி அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்தோர்களில் இரு செயற்பாட்டாளர்கள் அவர் எங்கிருந்தாலும் கைது செய்யப்படவேண்டிய போர்க் குற்றவாளி என கூறியுள்ளனர்.

இந்நிலையில் பிரித்தானிய செயற்பாட்டாளரும் இரு மாவீரர்களின் சகோதரனும் மற்றும் முதற் பெண் கடற் கரும்புலி கப்படன் அங்கயற்கண்ணியின் மைத்து னருமான நரேஷ் குமார் பொன்னுத்துரை இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் கடந்த சுதந்திர எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நானும் ஈடுபட்டிருந்தேன். அதில் என்னை பார்த்தபடி கொலை சமிக்ஞை காண்பித்த குறித்த அதிகாரி தனது கமராவில் வீடியோவும் எடுத்தார். இதனால் நான் மிகவும் அச்சுறுத்தல் அடைந்து அவரை கைது செய்ய வேண்டும் என கூறி பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்தேன்.

விடுதலைப் போராட்டத்தில் எனது குடும்பத்தில் இரு சகோதரர் மாவீரர் ஆகியுள்ளனர். அந்த நிலையில் குறித்த அதிகாரி வீடியோவினை வைத்து என்னையும் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளுவர்.

இதனாலேயே அவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட வேண்டும் என நான் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோன். அவர் யுத்த குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் இருந்தும் அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேற இங்குள்ள அதிகாரிகள் அனுமதித்தமை விசனதுக்குரியதே. எனவே அவர் எங்கிருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தர்.

இதேவேளை அதிகாரியின் அச்சுறுத்தலுகுள்ளான மற்றுமொரு செயற்பட்டாளர், முல்லைத்தீவு வைத்தியசாலை தாக்குதலில் படைத்தளபதியாக செயற்பட்ட அப்பாவி பொது மக்களை கொன்றொளித்த போர்க்குற்றவாளியான பிரியங்கா பெர்ணான்டோ உலகின் எப்பகுதியில் இருந்தாலும் கைதுசெய்யப்படவேண்டும் என தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email