ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் இருவர் நேற்று இரவு 7.55 மணியவில் பயணமாகியுள்ளனர்
கைத்தொழில்,வணிக அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சரும்,யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரே மீண்டும் ஜெனீவா நோக்கி பயணமாகியுள்ளனர்.(more)
இலங்கையிலிருந்து பயணமாகும் அமைச்சர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கட்டாரில் இரு தினங்கள் தங்கியிருக்கவுள்ளதுடன், இலங்கை ஜனாதிபதியின் விசேட செய்தியொன்றை கட்டார் அரசிடம் கையளிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.