(கார்ட்டூன் தீர்க்கதரிசன ஓவியர் அமரர் அஸ்வின்)
கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகிறது என்பது குறித்து விவாதம் பெரும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் பெரும் எதிர் பார்ப்புக்கு மத்தியில் இன்று புதன் கிழமை நடைபெறவுள்ளது.
இதன் போது இலங்கை குறித்த இடைக்கால அறிக்கையை ஐ.நா.ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் வெளியிடவுள்ளதுடன் சிறப்புரை ஒன்றையும் ஆற்றவுள்ளார்.
ஏற்கனவே அரச சார்பற்ற பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய ஆணையாளர், பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நாம் நிற்கிறோம் இயன்றவரை நீதியைப் பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம் என உறுதியளித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.