SHARE

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாளை (01.4.2018) பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்னாள் (10 Downing Street, London SW1A 2AA) பி.ப.13.00 மணி முதல் 16.30 மணிவரை நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறையில் வாடும் உறவுகளுக்கு குரல் கொடுக்க பிரித்தானியா வாழ் அனைத்து புலம்பெயர் தமிழருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக அண்மையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவத்தின் அரசியல் ஆயுள் கைதி ஆனந்த சுதாகரனினை, விரைவாக விடுதலையை செய்ய இலங்கைக்கு பிரித்தானிய அதிகாரிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இவ் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email