பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிரா கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
இதனையடுத்து நாட்டின் பிரதமராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கின்றார்.
பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றில் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் இவ் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 122 வாக்குகளும் ஆதரவாக 76 வாக்குகளும் பதிவாகின.
இதனையடுத்து 46 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிரா கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையச் செய்யப்பட்டது.
அதேவேளை 26 பேர் இவ் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
குறித்த வாக்கெடுப்பில் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருந்த கூட்டமைப்பு சர்ந்தப்பத்தை பயன்படுத்தி ரணிலுக்கு ஆதரவு வழங்க அவருடன் பேரம் பேசியதுடன் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ரணிலிடமிருந்து உறுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.