SHARE

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிகையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட நம்பிக்கையில்லா பிரேரணையின் போது தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருந்த சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த பிரேரணையை தோல்வியடைய செய்திருந்திருந்தனர்.

இந்நிலையிலேயே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் குறி எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக திரும்பியுள்ளது.

Print Friendly, PDF & Email