SHARE

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படும் பெருந்தொகையான ஆயுதங்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டு உள்ளது.

வவுனியா விசேட போலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தயாரிப்பான தமிழன் கைக்குண்டுகள் 22, அருள் எறிகணைகள் 34, உட்பட மைக்ரோ பிஸ்டல் ரவைகள் 3000, கைக்குண்டுகள் 34, மிதிவெடிகள் 48, ஆர்.பி.ஜி. குண்டுகள் 07, இ.ஜி.பி.எம்.ஜி. ரவைகள் 2000, விமான எதிர்ப்பு குண்டுகள் 1710, கிளைமோர்கள் 04, சி.04 வகை வெடிமருந்து 48 கிலோ என்பன மீட்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் இதில் விடுதலை புலிகளால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட தமிழன் கைக்குண்டுகள் மற்றும் அருள் எறிகணைகளை பார்வையிட்ட இராணுவத்தினர் அதன் தயாரிப்பு குறித்து வியந்துபோயுள்ளனர்.

1989 களில் இந்திய இராணுவத்தின் எதிர்த்தாக்குதலை முறியடிப்பதற்காக விடுதலைப்புலிகளால் சொந்த முயற்சியில் தயார் செய்யப்பட்டவையே அருள் எறிகணைகள் என தெரியவருகிறது.

Print Friendly, PDF & Email