SHARE
எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சித்திரைப் புத்தாண்டை ஜனாதிபதி மைத்திரி சிறிபாலசேனாவுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு வைபவத்தில் கலந்து கொண்ட சம்பந்தர் பானையில் பால் பொங்கி வருவதை கண்டு மகிழும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் விடுதலைக்காய் 400 நாட்களை கடந்தும் வீதியில் காத்திருக்கும் பெற்றோர் சித்திரை வருடத்தில் தனித்திருக்க, “ஜனாதிபதி மாமா சொன்னதுபோல் அப்பா சித்திரை வருடமான இன்று வீட்டுக்கு வருவார்” என ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளும்  எதிர்பார்த்திருக்க, தமிழ் மக்களின் வாக்குகளால் அரசியல் பீடத்தில் அமர்ந்திருக்கும் பொறுப்பு வாய்ந்த தலைவரின் இச் செயற்பாடு தமிழ் மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Print Friendly, PDF & Email