பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குற்ற பிரித்தானிய வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாளை லண்டனில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
தமிழருக்கு எதிராக சிங்கள பேரினவாதத்தின் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைக்கு எதிராகவும் தற்போதைய ஆட்சியிலும் அவை தொடர்வதை கண்டித்தும் ஜனாதிபதிக்கு எதிராக இவ் எதிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் Marlborough House, Pall Mall,London எனும் இடத்தில் மதியம் 13.00 மணிக்கு ஆரம்பமாகும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாய் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த பிரித்தானியா வாழ் அனைத்து தமிழ்த்தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளிலான பொதுநலவாய அரசதலைவர்களின் மாநாடு லண்டனில் நேற்று முன்தினம் (16) ஆரம்பமானது. ஏதிர்வரும் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சுபீட்சம் பாதுகாப்பு நியாயம் பேண்தகுதன்மை ஆகிய அம்சங்களின் கீழ் பொதுநலவாய நாடுகளின் நோக்கங்களை அடைந்துகொள்வது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த உத்தியோக பூர்வ விஜயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானிய பிரதமர் தெரேசாமேயை சந்திக்கவுள்ளதுடன் மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.