SHARE
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குற்ற பிரித்தானிய வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் இன்று மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
பொதுநலவாய அமைச்சுக்கள் அலுவலகத்துக்கு முன்னாள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுதிரண்ட பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ‘இனப்படுகொலை அரசின் தலைவரே! பிரித்தானியாவை விட்டு வெளியேறு’ என்றவாறான கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தமிழருக்கு எதிராக சிங்கள பேரினவாதத்தின் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைக்கு எதிராகவும் தற்போதைய ஆட்சியிலும் அவை தொடர்வதை கண்டித்தும் ஜனாதிபதிக்கு எதிராக இவ் எதிர்ப்பு போராட்டம் நடைபெறது.
பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளிலான பொதுநலவாய அரசதலைவர்களின் மாநாடு லண்டனில் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானது. ஏதிர்வரும் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சுபீட்சம் பாதுகாப்பு நியாயம் பேண்தகுதன்மை ஆகிய அம்சங்களின் கீழ் பொதுநலவாய நாடுகளின் நோக்கங்களை அடைந்துகொள்வது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
Print Friendly, PDF & Email