SHARE
புத்தாண்டுக்கு அப்பா வருவார் என காத்திருந்து ஏமாற்றம் அடைதுள்ள இரு பிள்ளைகளின் கல்வி செலவை ஏற்றுக்கொள்ள யாழில் உள்ள இலத்திரனியல் ஊடக  நிறுவனம் முன்வந்துள்ளது.
வடமாகாண ஆளுநர் றெஜினோல்குரேயின் வேண்டுகோளின் பேரில் குறித்த இலத்திரனியல் ஊடக  நிறுவனம் இவர்களின் கல்விச் செலவிற்காக மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாவினை வழங்க முன்வந்துள்ளது.
அரசியல் கைதியாக இருந்து தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் இருவரும் தமது தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் போது ஜனாதிபதி புத்தாண்டுக்கு முன்னர் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என பிள்ளைகளுக்கு நம்பிக்கை வழங்கி இருந்தார். அதனால் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என எதிர்பார்ப்புடன் பிள்ளைகள் காத்திருந்தன. ஆனால் ஆனந்த சுதாகரன் இதுவரையில் விடுதலை செய்யப்படவில்லை
Print Friendly, PDF & Email