SHARE
சுவாசப் பிரச்சினை காரணமாக, வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமிலிருந்த 14 இராணுவ வீரர்கள், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், இன்று (22) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பம்பைமடு இராணுவ முகாமில் இன்று (22) காலை இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், இராணுவத்தினருக்குத் திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 14 இராணுவ வீரர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டனர்.

அத்துடன் மேலும் பல இராணுவத்தினருக்கு, பம்பைமடு இராணுவ முகாமில் முதலுதவிச் சிகிச்சையளிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

Print Friendly, PDF & Email