அதில் சாட்சியங்கள், வெள்ளைவான் கடத்தல் அணியின் வேலையானது ஒரு பயங்கரமூட்டும் திரைப்படம் போலவே இருந்ததாகவும் ஆனால் அது சாதாரண வாழ்க்கைமுறைபோல் மாறியிருந்தததாகவும் வன்முறை, ஊழல், பயம், கோபம் மற்றும் வெறுப்பு என்பன தங்களைச் சூழ எப்பவும் இருந்தது என தெரிவித்துள்ளதாக குறிப்படப்படுள்ளது.
மேலும், கிழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை கண்மூடித்தனமாக கொல்லுதல், மறைமுக கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு அனுமதித்தல் இவற்றுக்கான கட்டளைகள் அனைத்தும் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் சிலரிடமிருந்தே வரும் என சாட்சியங்கள் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்படுள்ளது.
குறித்த சாட்சியங்கள் கட்டளை அதிகாரியின் பெயர்களையும் புகைப்படங்களையும் சித்திரவதைக்கூடங்களின் வரை படங்களையும் ITJP யிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐ.நா.வின் இறுக்கமாக மீளாய்வு மற்றும் சோதனைகள் இல்லாமல் இலங்கையின் விசேட அதிரடிப்படையினரை ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கான பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
ITJP ஆனது ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றுவதில் இருந்து தடைசெய்யப்படவேண்டும் என நம்பப்பபடும் 50 மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரினரின் பெயர்களைக் கொண்ட இரகசிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறிக்கையினை பார்வையிட எங்கே அழுத்தவும் https://t.co/knqQaQrRuV