SHARE
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த முல்லைத்தீவை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறுபக்கத்தில் புதுக்குடியிருப்பு சுதந்திரபுரத்தில் வசித்து வந்த சிறுவன் ஒருவனையும் காணவில்லை எனவும் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விருவேறு கடத்தல்சம்பவங்கள் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
முள்ளியவளை கிழக்கு 3 ஆம் வட்டாரத்தை சேர்ந்த  சிவநேசன் கஸ்தூரி (15) என்ற சிறுமி யாழ்ப்பாணம் கல்வியம்காட்டு பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், கடந்த 18 ஆம் திகதி மர்மமான முறையில் கடத்திசெல்லப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுமி தொடர்பில் இதுவரையில் எதுவித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சுதந்திரபுரத்தை சேர்ந்த சத்தியசீலன் கிருஜன் (15) என்ற சிறுவன் கடந்த 22 ஆம் திகதி தனது சிறிய தந்தையின் வீட்டிலிருந்து 14.00 மணியளவில் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். எனினும் சிறுவன் இன்னும் வீடுவந்து சேரவில்லை என அவரது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
Print Friendly, PDF & Email