SHARE

சிறிலங்கா ஆட்சியாளர்களின் கொடூரமான நடவடிக்கைகள் தொடர்பான சாட்சியங்கள் இருந்தபோதிலும், அந்த நாட்டுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆயுதங்களை விற்பனை செய்து வருவதற்கு, உள்துறை அமைச்சின் குழுநிலைக் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டது பற்றிய மேலதிகமான சடசியங்களை சனல் 4 ஆவணப்படம் வெளிப்படுத்தியுள்ள நிலையில், சிறிலங்காவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்காக அனுமதி தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது ஏன் என்று விளக்கமளிக்கமாறு பிரித்தானிய அரசிடம் ஆயுத விற்பனைக்கு எதிரான பரப்புரை அமைப்பு கோரியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 மே மாதம் முடிவுக்கு வந்த பின்னர் பிரித்தானியா, 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான இராணுவ மற்றும் இருபயன்பாட்டு கருவிகளை சிறிலங்காவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email