SHARE

கிளிநொச்சி – பரந்தன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரும் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்டவரின் மனைவியும் குறித்த பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் அதிபருக்கும் குறித்த ஆசிரியருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Print Friendly, PDF & Email