SHARE
தமிழ் பாட நெறி ஆசிரியரின் வினாவிற்கு எம் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உதாரணம் காட்டி 5 வயது மாணவன் ஒருவன் பதிலளித்த நெகிழ்ச்சி சம்பவம் முல்லைதீவு பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
தமிழில் இரட்டைக்கிழவி எனப்படும் அடுக்கு மொழிக்கு உதாரண வாக்கியங்களை அமைக்குமாறு கூறி ஆசிரியர் இரட்டை வாக்கியங்களை கொடுத்துள்ளார்.
அதில் தறதற , சடசட, படபட ஆகிய அடுக்கு மொழிகளுக்கு முறையே இராணுவத்தினர் பெண்களை தறதற என்று இழுத்தனர், முள்ளி வாய்கலில்  விழுந்த செல்கள் சடசட என்று வெடித்தன எனது மனம் படபட என்று அடித்தது என  வாக்கியங்கள் அமைத்து நெகிழவைத்துள்ளான்.
தமிழர் மீது சிங்கள பேரினவாதத்தால் கட்டவிழ்த்து விடப்படட மனிதப்படுகொலை எம் எதிர்கால சந்ததியின் சிந்தனையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது.
Print Friendly, PDF & Email