SHARE

சிறிலங்காவின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் இராணுவ மயமாக்கலும், பொறுப்புக்கூறும் வகையிலான அரசாங்கம் இல்லாமையும், அந்தப் பிரதேசத்தில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக் கூடும் என்று அனைத்துலக நெருக்கடிகளை ஆராயும் குழு எச்சரித்துள்ளது.

இரு வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா நிலவரம் குறித்து வெளியிட்ட விரிவான அறிக்கையின் தொடர்ச்சியாக நேற்றைய இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த அறிக்கையில், சிறிலங்காவின் வடக்கில் மறுக்கப்படும் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து முதலாவது பகுதியிலும், வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் கீழ் நடக்கும் மீள்குடியேற்றம் குறித்து இரண்டாவது பகுதியிலும் கூறப்பட்டுள்ளது

Print Friendly, PDF & Email