SHARE

நீர்வேலி பகுதியில் உள்ள இந்து ஆலயத்தினுள் வைத்து வாள் வெட்டினை மேற்கொண்ட சந்தேக நபர்களை சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை. 

குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் முன்னிலையில் நடைபெற்றது.
அதன் போது நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் தாக்குதலுக்கு இலக்கான இரு சாட்சிகளும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டவில்லை.
தம் மீது தாக்குதல் நடத்தும் போது தாக்குதலாளிகள் முகத்தினை மறைத்து கறுப்பு துணி கட்டி இருந்தமையால் , தாக்குதலாளிகளை அடையாளம் காணமுடியவில்லை என சாட்சியங்கள் மன்றில் தெரிவித்தன.
அதை அடுத்து குறித்த வழக்கினை எதிர்வரும் 05ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் சந்தேக நபர்கள் மூவரையும் அன்றைய தினம் வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Print Friendly, PDF & Email