SHARE
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூறியமைக்காக இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் , வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூர்ந்தார்கள் என வங்கி ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டுருந்தனர்.
இதுகுறித்த செய்தி ஊடகங்களில் நேற்று வெளியானதைத்தொடர்ந்து தற்போது குறித்த வங்கிக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் பலர் ஹற்றன் நஷனல் வங்கிக்கு எதிராக பதிவுகள் செய்து வருகின்ற அதேவேளை சிலர் அதனையும் தாண்டிச் சென்று அவ் வங்கியுடனான தமது கணக்கு நடவடிக்கையினை முறித்துக் கொண்டுள்ளனர்.
மனித உணர்வுகளை மதிக்க தெரியாத அந்நிறுவனம் தற்போது பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
Print Friendly, PDF & Email