ஜெனிவாவில் இருந்து சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்அதிகாரி அதுல் கெசாப், நேற்றுமுன்தினம் இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்க அதிகாரிகளில் ஒருவரான அதுல் கெசாப், அங்கிருந்து திடீரென நேற்று முன்தினம் சிறிலங்கா வந்தார்.
அவர் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசினார்.
உதவியாளர்கள் எவரும் இன்றி இருவரும் தனித்தனியே இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
அதன்பின்னர் அவர் சிறிலங்கா அரசதரப்பைச் சேர்ந்த அதிகாரிகள் பலருடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.