SHARE

தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு நாளை மறுநாள் 05ம் திகதி இடம்பெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இளைஞர் மாநாடு தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகர்களிற்கிடையிலான சந்திப்பு இன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இளைஞர் மாநாடு தொடர்பாக இதில் ஆராயப்பட்டு, யூலை மாதம் நடுப்பகுதியில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை விடுக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, நாளை மறுநாள் 05ம் திகதி, 12.30 மணிக்கு யாழ் பொதுநூலகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொள்ளவுள்ளார்.

Print Friendly, PDF & Email