SHARE

தமிழ் மொழியில் எழுதப்படவில்லையா, தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளதா? அவை தொடர்பில் அறிவிக்குமாறு அரச கரும மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் மக்கள் தமது மொழி தொடர்பில் இழைக்கப்படும் தவறுகளை பின்வரும் சமூக ஊடகங்கள் ஊடாக அறிவிக்க முடியும் என அரச கரும மொழிகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தொலைபேசியில் 1956 என்ற துரித இலக்கத்துக்கும் வைபர், வட்சப் மற்றும் இமோ அகிய சமூக ஊடகங்களில் 0714854734 என்ற இலக்கத்துக்கும் அறிவிக்க முடியும்.

Print Friendly, PDF & Email