SHARE

இந்திய அமைதிப்படையென்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்தியப்படையினர் அமைத்து வழிபட்ட முருகன் ஆலயமொன்று கண்டறியப்பட்டுள்ளது. வடமராட்சி செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு அருகில் ஆட்களற்ற பகுதியில், பற்றைக்காட்டிற்குள் இருந்த ஆலயமே கண்டறியப்பட்டுள்ளது.

1987ம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அமைதிப்படையினர், செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகில்- தொண்டமானாற்றில்- முகாம் அமைத்திருந்தனர். அவர்கள் வழிபட இந்த ஆலயத்தை உருவாக்கியிருக்கலாமென தெரிகிறது.

இந்த ஆலயத்தில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த இந்திய இராணுவத்தினருடைய பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயம் யாழ் தொண்டைமணாறு செல்வச்சன்நிதி கோவிலுக்கு எதிராக சுமார் 1km தூரத்தில் இது காணப்படுகிறது.

தொண்டைமானாறு துருசு திருத்தப்பணி இடம்பெற்றுவருகிறது. இதன்போது பற்றைக் காடுகள் துப்பரவு செய்யும் போது இந்த ஆலயம் கண்டறியப்பட்டது.

Print Friendly, PDF & Email