SHARE

-ஏற்க மறுத்த வடமாகாணசபை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை திருப்பித்தருமாரு கேட்டிருந்த வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வின் வீட்டு வாசலில் அப்பணத்தினை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வைத்தனர்.

குறித்த பணத்தினை வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் ஆகியோர் பெற்றுகொள்ள மறுத்ததினையடுத்து எதிர்க்கட்சிதலைவர் தவராசாவின் வீட்டுக்கே சென்ற மாணவர்கள் சேகரித்த பணத்தை ஒரு மூட்டையில் கட்டி அவரது வீட்டு வாசலில் வைத்தனர்.

இவ்வாண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான செலவுகளிற்காக வடமாகாணசபை மாகாணசபை உறுப்பினர்களிடமிருந்து 7,500 ரூபாவினை அறவீடு செய்திருந்தது.

இந்நிலையில் ”முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடை அணிந்த சிலரே நடாத்தினார்கள். நாங்கள் எல்லோம் வெளியில் நிற்கவைக்கப்பட்டோம் எமக்குரிய மரியாதை அங்கு இல்லை” என கூறிய எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார்.

ஆனாலும் மரண வீட்டில் மேளதாள மாலை வரவேற்பை எதிர்பார்க்கக்கூடாது என கூறிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த பணத்தினையும் சேர்த்தே நினைவேந்தல் செய்யப்பட்டது என பதிலளித்திருந்தார். அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் அதனையே கூறியிருந்தார்.

இதனையடுத்து குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதினையடுத்து பாவப்பட்ட பணத்தினை திருப்பி கொடுக்க வேண்டும் என முடிவு செய்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆளுக்கு ஓரு ரூபா எனும் வீதம் அந்தப்பணத்தை சேகரித்து வந்தனர்.

இந்நிலையில் 7 ஆயிரம் பேரிடம் சேகரித்த பணத்தை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வடமாகாணசபைக்கு கொண்டு வந்தனர். எனினும் எனினும் அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அந்த பணத்தை வாங்க மறுத் துவிட்டார்.

இதன் பின்னர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் அந்த பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோது அவை தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர் மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம் ஆகவே இந்த பணத்தை வாங்கி கொள்ளமாட்டோம்.

ஆகவே நீங்கள் எதிர்கட்சித் தலைவருடன் பேசுங்கள் என பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பணத்தை பாவப்பட்ட பணம் என்னும் பெயர் எழுத்தப்பட்ட மூட்டையில் கொண்டு வந்த மாணவர்கள் அதனை எதிர்க்கட்சி தலைவர் தவராசாவின் வீட்டு வாசலில் வைத்தனர்.

Print Friendly, PDF & Email