SHARE

நாட்டின் இந்துக் கலாசார அமைச்சின் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதற்கு சிவசேனை அமைப்பு கடும் கண்டணம் வெளியிட்டுள்ளது.

இந்துக் கலாசார அமைச்சுக்குள் புற்றுநோயக் கருவைப் புகுத்தி அணு அணுவாக இந்துக்களை வதைப்பதைவிட, இந்துக் கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலே சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டில் நடப்பது நல் ஆட்சியா? இந்துக்களை கொல்லும் கொல் ஆட்சியா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஜவருக்கான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் வழங்கப்பட்டது. இதில் காதர் மஸ்தான் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் ஆகியவற்றின் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே இது தொடர்பில் சிவசேனை அமைப்பின் தலைவர் இன்றைய தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

இஸ்லாமியரைத் துணை அமைச்சராக்கிய கொடுமையை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம். மாண்புமிகு துணை அமைச்சர் நீறணிந்து சந்தனமிட்டுச் சிவராத்திரி விழாவுக்கு வருராவாரா?

ஏனைய சமயத்தவர்களைக் காபீர்கள் (நீசர்கள்) எனக் கற்றவர், உருவ வழிபாட்டையே ஒத்துக்கொள்ளதவர், இந்துக்களை இஸ்லாமுக்கு மத மாற்றுவதையே இலக்காகக் கொண்ட குழு சார்ந்தவர், இந்துக்கள் வழிபடும் மாடுகளைக் கொன்று உண்பவர், இந்து ஒருவர் தன் சட்டைப் பைக்குள்ளேயேனும் இந்துக் கடவுளரின் படத்தை வைத்திருத்தலைக் கொடும் குற்றமாகக் கருதித் தண்டிக்கும் சவூதி அரேபிய நாட்டிற்குப் புனித வழிபாட்டுப் பயணம் மேற்கொள்பவர், மட்டக்களப்புக் கல்லடியில் அம்பாறைக் கல்முனைக்குடியில் இந்துக் கோயில்களின் மேல் இஸ்லாமியப் பள்ளிவாயில்களைக் கட்டியெழுப்பியதை எப்பொழுதும் கண்டிக்காதவர், அத்தகையவர் இந்துக் கலாசார அமைச்சின் மாண்புமிகு துணை அமைச்சர்.

இந்துக் கலாசார அமைச்சுக்குள் புற்றுநோயைக் கருவைப் புகுத்தி அணு அணுவாக இந்துக்களை வதைப்பதைவிட, மாட்சிமை தங்கிய குடியரசுத் தலைவரே, இந்துக் கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள். என மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Print Friendly, PDF & Email