பதுளை – பசறை நகரின் கடையொன்றில் பரவிய தீயில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.
இன்று (14) அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீ விபத்தில் கடையின் பின்புறமாக அமைந்துள்ள அறையொன்றில் தங்கியிருந்த கடை உரிமையாளரின் தாய், மகள் மற்றும் உறவுமுறை பெண் ஒருவர் ஆகிய மூவருமே பலியாகியுள்ளனர்.
திடீரென பரவிய தீயினில் சிக்குண்ட மூவரும் வெளியில் வரமுடியாத நிலையிலேயே இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீ விபத்திற்கு மின் ஒழுக்கு காரணமாக இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.