SHARE

தாபல் தொழிற்சங்கங்களின் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தால்டி 13 இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் தேங்கிக்கிடப்பதாக தபால் மா அதிபர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்தன.

தபால் சேவையில் இணைத்துக்கொள்ளும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தபால் தொழிற்சங்கத்தினர் கடந்த நான்கு நாள்களாக தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே தபால் விநியோக மத்திய நிலையம் உள்பட நாடுமுழுவதும் 13 இலட்சத்துக்கும் அதிகமான தபால்கள் தேங்கிக் கிடங்கின்றன என்று தபால் மா அதிபர் அலுவலம் சுட்டிக்காட்டியுள்ளது.

“எமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய தீர்வை இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை. எமக்கான தீர்வு கிடைக்கும்வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்” என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email