SHARE

யாழ்பாணம் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட வேலணை மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் பாடசாலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்றுவரும் மயூரன் மதுபன் (வயது 14) என்ற மாணவனே குறித்த பாடசாலை விடுதியின் மலசல கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நேற்றைய தினம் தனது வீட்டிற்கு சென்று பின்னர் விடுதிக்கு திரும்பிய நிலையிலேயே குறித்த மாணவன் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மாணவனின் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகாத நிலையில் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மர்மம் நிலவுகின்றது.

Print Friendly, PDF & Email