SHARE
மல்லாகம் பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மல்லாகம் ஏழாலை மற்றும் தெல்லிப்பளை வைத்திய சாலை சூழலில் பெருமளவான இளைஞர்கள் கூடியுள்ளதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் பெருமளவிலான பொலிஸார் தற்போது அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பொலிசார்
யாழ்.மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து வரவிக்கப்படுள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று இரவு இரு குழுக்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு உள்ளது. மோதல் சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்த வேளை பொலிசார் மீதும் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில்  பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
Print Friendly, PDF & Email